நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகள் முழு விவரம்
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகள் முழு விவரம்
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன
தட்கல் டிக்கெட்
ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடையாளம் கட்டாயம் என தெரிவித்துள்ளது.
ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்களுக்கு தட்கல் முன்பதிவு நேரத்தில் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏசி பெட்டிகளுக்கு காலை 10 முதல் 10.30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11.30 மணி வரையிலும் முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
ரயில் கட்டணம் உயர்வு:-
ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏசி அல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம்
ஏசி விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான டிக்கெட்டில் 500 கிலோமீட்டர் தொலைவிற்கு எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை எனவும் 500 கிலோமீட்டருக்கு பிறகு, ஒவ்வொரு கிலோமீட்டருக்கு தலா 50 காசுகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிலிண்டர் விலை:-
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி LPG சிலிண்டர் விலையில் திருத்தங்களை மேற்கொள்ளும். அதன்படி ஜூலை மாதத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பிருக்kஅலாம்
பான் கார்டு
விதியும் அடங்கும். ஏற்கனவே பான் மற்றும் ஆதார் இரண்டும் இருந்தால், அவற்றை ஒன்றாக இணைப்பதும் அவசியம் என்றும். இதற்கு, டிசம்பர் 31, 2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI மாற்றம்:-
கூகுள்பே, ஃபோன்பே மற்றும் பேடிஎம் போன்ற அனைத்து UPI-அடிப்படையிலான ஆப்ஸ்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும்.
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் கட்டணம்:-
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகளை கட்டணம் அறிவித்துள்ளது. அதன்படி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கியின் ஏடிஎம் மூலம் ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் பணம் எடுக்கும்பட்சத்தில், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாயும் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு 8.50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஏடிஎம் மூலம் பி.எப் பணம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இது ATMகள் மற்றும் UPI மூலம் உடனடி PF பணம் எடுkகும் வசது ஜூலை மாதத்தில் EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பஸ், ரயில் , மெட்ரோ அனைத்துக்கும் ஒரே டிக்கெட்
சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே
டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஏற்கனவே மாநகரப் பேருந்தில் பயணிக்க மாநகர் போக்குவரத்து கழகத்தால் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதேபோல், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகளுக்கு பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் புறநகர் ரயிலில் பயணிக்க குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை 1000 பெற ஜூலை 15 முதல் முகாம் நடைபெறும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மக்களின் குறைகளைப் போக்க அடுத்த மாதம் ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும்; மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களும் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும்; தன்னார்வலர்கள் வீடுகளுக்கு வந்தே விண்ணப்பிக்க தேவையான உதவிகளை வழங்குவர் - என தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்