ஜூலை 1ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு? முழு விவரம்
ஜூலை 1ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு? முழு விவரம்
ஏசி வசதி இல்லாத பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், பயணிகள் டிக்கெட் விலையை ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா அளவில் உயர்த்தவும்
ஏசி வகுப்பு டிக்கெட்டுகளின் விலையில் கிலோமீட்டருக்கு 2 பைசா அளவில் உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாம்.
மேலும் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் ரயில்களில் கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் புறநகர் ரயில்களின் டிக்கெட் விலை , இரண்டாம் வகுப்பு ரயில்களின் டிக்கெட் விலை , மாத சீசன் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படவில்லை. என தகவல்கள் வெளியாகி உள்ளது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
மேலும் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய ஆதார் அட்டையை, IRCTC கணக்குடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது. இதுவும் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்