Breaking News

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது

அட்மின் மீடியா
0

எஸ். பி. சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்டம் பண்டாராவிளையைச் சேர்ந்தவர் இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஜவுளி மற்றும் கைத்தறி துறை மந்திரியாக பதவி வகித்தார். 


பின்பு 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார் அதன் பின்பு நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.தமிழக அமைச்சரவையில் 2016 ஆகத்து 29 அன்று நடந்த மாற்றத்தில் சண்முகநாதன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் 59-வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவர் நிறுவனங்களில் முதலீடு செய்து பங்கு தருவதாக கூறி சகோதரி கணவரின் சொத்துகளை அடமானம் வைத்து ரூ.17 கோடி ஏமாற்றிய புகாரில் நடவடிக்கை

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback