மலேசியாவில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் பலி Malaysia bus crash kills at least 15 students
மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 15 பேர் பலி.
பேராக் மாநிலத்தில் இருக்கும் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்களுடன் பேருந்து பேராக் மாநிலத்தையும் கிளந்தான் மாநிலத்தையும் இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி முன்னால் சென்ற கார் மீது மோதியுள்ளது.
இதில் பேருந்து மற்றும் கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 48 பேரில், 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், மேலும் இருவர் மருத்துவமனையில் இறந்தனர்
சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர், பேருந்து பள்ளத்தில் ஒரு பக்கம் சாய்ந்து கிடந்ததைக் கண்டனர். ஹைட்ராலிக் கருவிகளைப் பயன்படுத்தி பேருந்தின் பின்புறப் பகுதியை வெட்டி பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்ட அதிகாரிகள் காயமுற்றோரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்