Breaking News

14 நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் மீறினால் உரிமம் ரத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

14 நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் மீறினால் உரிமம் ரத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி அறிவிப்பு



உணவு விற்பனை தொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • உணவு விற்பனை செய்யும் வணிகர்கள் அனைவரும் http://foscos.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
  • உணவக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை தடுப்பூசி செலுத்தி, அதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
  • சமையல் எண்ணெயை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய எண்ணெயை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டுமே விற்க வேண்டும்
  • உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, அதற்கான பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.
  • உணவுப் பொருட்களில் ஈ, பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி காட்சிப்படுத்த வேண்டும்.
  • விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும்.
  • செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாக்கப் படும் வகையில் பரிமாறவோ/ பொட்டலமிடவோ கூடாது.
  • உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.
  • சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளை செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.
  • உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
  • எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும், பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தக்கூடாது. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் விற்பனை செய்யும் போது, FSSAI உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வெண்டும். 
  • உணவகங்கள்/ பேக்கரி/ இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.
  • வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback