தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்த 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை விடுதி காவலாளி கைது
தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்த 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை விடுதி காவலாளி கைது
சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல் பட்டுவருகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 128 மாணவிகள் தங்கி கல்லூரிகள்,பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் 13வயது மாணவி சானிடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் மாணவியை சேவை இல்லத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு மர்ம நபர் திடீரென அந்த மாணவியின் முகத்தில் துணியைக் கொண்டு மூடி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.அப்போது மாணவி அவனிடம் இருந்து தப்பி ஓட முயச்சித்தபோது அந்த மர்ம நபர் அந்த மாணவியை கொடூரமான தாக்கியுள்ளார்
இதில் கீழே விழுந்த மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இதையடுத்து சேவை இல்லத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டபுகாரின் அடிப்படையில் போலீசார் மகளிர் விடுதிக்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவந்தனர்.
மேலும் அரசு சேவை இல்லத்தில் சுற்றுசுவர் அதிக உயரம் கொண்டவை இதனால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாது மேலும் வெளியில் வாட்ச்மேன் போடப்பட்டு இருப்பதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாது எனவே போலீசார் வாட்மேன் மேத்யூ (வயது-50) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காவலாளி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மேத்யூ மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் மேத்யூவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது மேத்யூவிற்கு வரும் 23ஆம் தேதி வரை, அதாவது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
பெண்கள்கள் இருக்க கூடிய இடங்களில் பெண் காவலர்களை தான் நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். எல்லா பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள், தனியார் காப்பகங்களிலும் காவலர்கள் நியமிக்கப்பட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்