ஹாஸ்பிடல் போனும் அவசரமா பணமாக கொடுங்க ஜிபே பண்ணிடுறோம் என 112 பேரிடம் 2 லட்சம் வரை மோசடி செய்த தம்பதி கைது
ஹாஸ்பிடல் போனும் அவசரமா பணமாக கொடுங்க ஜிபே பண்ணிடுறோம் என 112 பேரிடம் 2 லட்சம் வரை மோசடி செய்த தம்பதி கைது
கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி மதியம் 3 மணியளவில் பைக்கில் வந்த இளம் தம்பதியினர் சக்திவேலிடம், நாங்கள் பக்கத்தில் உள்ள மருத்துவமனை வந்தோம். ஏ.டி.எம் கார்டு ஒர்க் ஆகல, ஹாஸ்பிடலில் கொடுக்க ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. நீங்க பணம் கொடுத்தால், நான் உங்களுக்கு ஜி.பேயில் அனுப்பிட்ரேன் என அவர்கள் கூறியதை நம்பி ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து அந்த தம்பதியிடம் கொடுத்தார்.
அதனை வாங்கி கொண்ட அவர்கள், ஜி.பே மூலம் உங்களிடம் வாங்கிய பணத்தை அனுப்பி விட்டோம் என செல்போனை சக்திவேலிடம் காண்பித்தனர். அவரும் பணம் வந்துவிட்டது என நினைத்து கொண்டார்.
சிறுது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்த அதே தம்பதியினர் இன்னும் ரூ.2 ஆயிரம் வேண்டும் நீங்கள் கொடுத்தால் அதேபோல் ஜிபே மூலம் அனுப்பிடுறேன் என கூறியதை நம்பி ரூ.2 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அவர்கள் மறுபடியும் அதேபோன்று ஜி.பேவில் அனுப்பி விட்டோம் என செல்போனை காண்பித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
அவர்கள் அனுப்பிய பணம் தனக்கு வராததால் அவர்கள் தன்னை ஏமாற்றியுள்ளார்கள் என்பதை அறிந்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
மோசடியில் ஈடுபட்ட இந்த தம்பதியை பிடிக்க காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி மூலம் இரு சக்கர வாகன பதிவெண்ணை கண்டறிந்து. இந்த மோசடி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட தம்பதி சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது ரிஸ்வான்(21), அவருடைய மனைவி சர்மிளா பானு(20) என்பதும், இவர்கள் 2 பேரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 1½ மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும்
இதேபோல் மொத்தம் 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துள்ளார்கள் என கூறியதை கேட்டு அதிர்ந்தனர்
ஜி.பே.யில் பணம் அனுப்பும்போது பே மற்றும் ரிகொஸ்ட் இருக்கும் அதில் பே என்ற குறியீட்டை அனுப்பினால் பணம் போகும். ரிகொஸ்ட் என்ற குறியீட்டை அனுப்பினால் பணம் போகாது. மெசேஜ் மட்டும் போகும். இதன் மூலம் மனைவியுடன் சேர்ந்து மோசடி செய்து வந்துள்ளார்.
சிறிய தொகைதானே என்று பலரும்புகார் செய்யாமல் இருந்ததால் இந்த மோசடி தம்பதி போலீசில் சிக்காமல் இருந்துள்ளனர். தற்போது போலீசில் சிக்கி உள்ளதன் மூலம் இந்த மோசடி தெரியவந்தது. கைதான தம்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags: தமிழக செய்திகள்