Breaking News

ஆர்சிபி வெற்றி விழா கொண்டாட்டம் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

அட்மின் மீடியா
0

ஆர்சிபி வெற்றி விழா கொண்டாட்டம் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றதைக் கொண்டாட விதான் சவுத்தில் இருந்து சின்னசாமி ஸ்டேடியம் வரை பேரணி நடத்தியது. 

வெற்றிக் கொண்டாட்டத்தையும், கோப்பையுடன் வீரர்களையும் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகினர். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

சின்னசாமி மைதானம் கேட்-6ல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால் இந்த சோக நிகழ்வு அரங்கேறியது. கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

ஆர் சி பி வீரர்கள் கர்நாடக மாநில முதல்வர் துணை முதல்வர் ஆளுநர் என அத்தனை பேரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.இச்சம்பவத்துக்கு மன்னிப்புக்கோரியுள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பாடுகள் செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.

மேலும் RCB வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி |உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

மேலும் பெங்களூருவில் அதிகரித்த கூட்ட நெரிசல் காரணமாக சின்னசாமி மைதானம் அருகே உள்ள கப்பன் பார்க் மற்றும் விதான சவுதா மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலைக் குறைக்க எம்ஜி சாலையில் சில சேவைகள் நிறுத்தப்பட்டன.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback