Breaking News

தொழிலாளர்கள் இனி ஒரு நாளைக்கு 10 மணி நேரம்பணி செய்யவேண்டும் –ஆந்திரா அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திராவில் தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 



இது குறித்து ஆந்திரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி 

இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும். அனைத்து மாநிலங்களிலும், உலகமயமாக்கல் நிகழ்ந்துவருகிறது. உலக விதிகளை அமல்படுத்த இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலை நேரத்தை அனுமதிக்கும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு அம்மாநில சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது" பெரிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்த விதிகளைத் திருத்துமாறு மத்திய அரசின் அழுத்தத்தில் மாநிலம் உள்ளது. இந்தத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும்,” எனவும் இந்த விதிகளை எதிர்த்து ஜூலை 9 ஆம் தேதி அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதில் அனைத்து பிரிவினரும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback