Breaking News

மகளிர் உரிமைத் தொகை 1000 பெற ஜூலை 15 முதல் முகாம் நடைபெறும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மகளிர் உரிமைத் தொகை 1000 பெற ஜூலை 15  முதல் முகாம் நடைபெறும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மக்களின் குறைகளைப் போக்க அடுத்த மாதம் ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும்; மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களும் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும்; தன்னார்வலர்கள் வீடுகளுக்கு வந்தே விண்ணப்பிக்க தேவையான உதவிகளை வழங்குவர் - என தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க  ஜூன் 4ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட் நிலையில் முகாம் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:-

ரேஷன் கார்டு

வங்கி கணக்கு

ஆதார் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை.

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback