Breaking News

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற 1 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற  1 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் 


தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், பிள்ளைகள்

ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 1000/- முதல் ரூபாய் 25000/- வரை, கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க:- 

https://scholarships.gov.in 

என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:-

ஆதார் கார்டு 

ஜாதி சான்றிதழ்

வருமான சான்றிதழ்

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக்கணக்கு  மற்றும் ஆதார் எண்ணை சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்

வகுப்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

31.08.2025 

உயர் கல்வி மாணவர்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 

31.10.2025.

மேலும் விவரங்களுக்கு :-

மத்திய நல ஆணையர் அலுவலகம், 

தொழிலாளர் நல அமைப்பு, 

தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், 

வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை – 600032. 

மின்னஞ்சல் – wclwo.chn-mole@gov.in 

தொலைபேசி எண்: 044-29530169

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback