ஜூலை 1 முதல் ரயிலில் TATKAL முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் - பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த இந்திய ரயில்வே
ஜூலை 1 முதல் ரயிலில் TATKAL முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் - பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த இந்திய ரயில்வே
ஜூலை ஒன்றாம் தேதி முதல் ரயிலில் பயணிக்க தட்கல் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
வழக்கமாக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அறுபது நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயணம் செய்யும் நாளுக்கு ஒருநாள் முன்னதாக தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டியும், 11 மணிக்கு ஸ்லீப்பர் பெட்டிக்கும் தட்கல் முன்பதிவு தொடங்கும்.
இந்நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் ரயிலில் பயணிக்க தட்கல் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
வருகிற ஜூலை 15 முதல் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு செய்யப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
அதாவது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு ஓடிபி வரும், அதனை உள்ளீடு செய்த பின்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
Tags: தமிழக செய்திகள்