நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை , தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்கள், முழு விவரம் இதோ
நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை , தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்கள், முழு விவரம் இதோ
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இந்த போர் ஒத்திகை எங்கெல்லாம் நடைபெறும் என்பது குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைசகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், தமிழகத்தில் சென்னை இடம் பெற்றுள்ளது. ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, கொச்சின், திருவனந்தபுரம், பாண்டிசேரி உள்ளிட்ட இடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளது. இது போன்ற போர் ஒத்திகை பயிற்சி, 1971ல் நடந்த இந்தியா - பாக்., போரின்போது கடைசியாக நடத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கல்பாக்கம், உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags: தமிழக செய்திகள்