மதரஸா பாட திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய பாடம் சேர்ப்பு - முழு விவரம் இதோ
மதரஸா பாட திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய பாடம் சேர்ப்பு - முழு விவரம் இதோ
உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை கொடூரமாக சுட்டுக் கொலை செய்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத நிலைகளை இந்திய ராணுவம் தகர்த்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில மதரஸா கல்வி குழுவின் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி,
இந்திய ராணுவப் படைகள் வெளிகாட்டிய வீரம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் மதரஸா மாணவர்களும் அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென மதரஸா பாடத்திட்டங்களில் என்.சி.ஆர்.சி. பாடத்திட்டத்தை இணைத்துள்ளோம்,
மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய பாடங்களையும் இணைத்து அதன் மூலம் வருங்காலத் தலைமுறையினர் நம் நாட்டு ராணுவ வீரர்களின் துணிவு, வீரம், பலம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்” மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார்
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி