சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி முழு விவரம்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. இருப்பினும் கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் (60), கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இஎஸ்ஐ மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.உயிரிழந்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் (60) என்பவரின் வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கவும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்