Breaking News

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்ட விகிதத்தில் தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்)

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-ம். 

திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30.00.000/- கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது.

சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. 

திட்டம்-2ன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகித்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. 

மேலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இயங்கலை/முதுநிலை தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்-1ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், 

திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியருக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30.00.000/-வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/ கருவிகள்/ இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அளவில் பயன்படுத்திகொள்ளுமாறுதருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தனிநபர்கடன் திட்டம். சுய உதவிக்குழுக் கடன், விராசாத் (கைவினை சுலைஞர் கடன் திட்டம்) உள்ளிட்ட கடன் விண்ணப்பங்களுடன் சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ் ஆதார்அட்டை திட்ட அறிக்கை. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்விக் கடன் விண்ணப்பங்களுடன் சிறுபான்மையினர் மதச்சான்றிதழ் /சாதிச்சான்றிதழ் /வருமானச் சான்றிதழ் நகல் / இருப்பிடச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை/ வாழ்விடச் சான்று(Smart card), ஆதார் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல். உண்மைச் சான்றிதழ் ( Bonafide Certificate) அசல் கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல்(Original). மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback