சென்னையில் நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்
சென்னையில் நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் பாமகவில் மீண்டும் தந்தை மகன் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளைய தினம் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணியளவில்நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாநில , மாவட்ட நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பானது சென்னை சோழிங்கநல்லூரில் மே 30, முதல் மூன்று நாட்களுக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு) நடைபெறவுள்ளது.
மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை எக்ஸ் தளத்தில் பாமகவைச் சேர்ந்த தருமபுரி மாவட்ட செயலாளர் பூபால் தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்