Breaking News

அன்புமணி மீது ராமதாஸ் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் என்ன? என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

அன்புமணி மீது ராமதாஸ் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் என்ன? என்ன முழு விவரம்

பாமகவில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. 

இந்த மோதல் முற்றியதை எடுத்து அன்புமணியே கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, 

தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 

  • அழகான ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார்? 
  • எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்தேன்.

  • 50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்
  • அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்.தவறு செய்தது அன்புமணி அல்ல, 35 வயதில்மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்து விட்டேன். அன்புமணி தான் தவறு செய்து தவறான ஆட்டத்தை துவங்கினார். நான் என்ன தவறு செய்தேன் என அன்புமணி பேசியது, முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி.
  • புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார்? முகுந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்தபோது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியான செயலா? பனையூரில் அலுவலகம் திறந்திருக்குறேன், அங்கே வந்து என்னை சந்தியுங்கள் எனச் சொன்னது சரியா? 4 சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தது யார்?
  • அன்புமணியின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருந்தது. 
  • மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு அன்புமணி இருந்தது சரியா?
  • தனது தாய் சரஸ்வதி மீதே பாட்டிலை எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி
  • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்துகொண்டபோதே நான் செத்து போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என நிர்வாகிகளை அன்புமணி தடுத்துவிட்டார்.பொய்யை மூச்சு விடாமல் பேசுபவர் அன்புமணி, அவர் கூறிய பொய்யை நம்பி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. கட்டுக்கோப்பாக நடத்தி வந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்தி விட்டார், தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை. இதை அவரிடமே சொல்லியிருக்கிறேன், நிர்வாக குழுவில் ஒருவர் பேசினாலே அவரை கடித்து குதறிவிடுவார். இதுதான் நிர்வாக குழுவின் லட்சனம்
  • அதிமுக - பாமக கூட்டணியே இயற்கையான கூட்டணி, அதுவே வெற்றிக் கூட்டணி. 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைக்க நான் சொன்னதை, அன்புமணி ஏற்கவில்லை. பாஜகவோடு கூட்டணி அமைக்காவிட்டால், தற்கொலை செய்துக்கொள்வேன் என மிரட்டினார். அதிமுக உடன் சென்றிருந்தால், நாங்கள் 3 இடங்களில் வென்றிருப்போம், அவர்கள் 7 இடங்களில் வென்றிருப்பர். அவரும், சௌமியாவும் என் காலைப் பிடித்து அழுதனர். என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை. பாஜக உடன் கூட்டணி என்று சௌமியா ஏற்பாடு செய்து விட்டார், வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்.

என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்

முகுந்தன் விலகல்

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முகுந்தன் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முகுந்த அன்புமனி ராமதாசுக்கு அனுபியுள்ள கடிதத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.



Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback