பள்ளிகள் திறப்பு ஜூன் 9 என சமூகவலைதளங்களில் பரவும் வதந்தி - உண்மை என்ன
அட்மின் மீடியா
0
சமூகவலைதளங்களில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9 என பரவும் வதந்தி - உண்மை என்ன
பரவும் செய்தி:-
கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஜூன் 9 என சமூக வலைதளங்களில் ஓர் செய்தி பரவுகின்றது
உண்மை என்ன:-
ஜூன் 9 பள்ளிகள் திறக்கப்படும் என சமூகவலைத்ளங்களில் பரவும் செய்தி பொய்யானது யாரும் நமபவேண்டாம்
இது வரை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த வித அறிவிப்பும் அறிக்கவில்லை
பள்ளிகல்வித்துறையும் எந்த வித அறிவிப்பும் அறிக்கவில்லை
பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதில்
தமிழ்நாட்டில் பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அரசு, அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
மேலும் அதன்பின்பு
ஜூன் இரண்டாம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள பள்ளி கல்வித்துறை வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
எனவே சமூக வலைதளங்களில் வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி