சிரியா மீதான 46 ஆண்டு கால பொருளாதார தடை நீக்கம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
சிரியா மீது 46 ஆண்டு கால பொருளாதார தடை நீக்கம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். முதலில், சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு நேற்று முன்தினம் சென்றார். ரியாத் நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்திற்க்கு சிரியா நாட்டின் புதிய இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாராவும் கலந்து கொண்டார்
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்துக்கு முன்பு, அகமது அல்-ஷாராவை டிரம்ப் மூடப்பட்ட அறைக்குள் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறை.
டிரம்ப்-இளவரசர் சல்மான்-அகமது அல்-ஷாரா ஆகியோர் இடையிலான சந்திப்பில், துருக்கி அதிபர் எர்டோகன், தொலைபேசி அழைப்பு மூலம் கலந்து கொண்டார்.
அதன்பின்பு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ''சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த தடை, சிரியாவை முடக்குவதாக இருந்தது. தடையை நீக்குவது சிரியாவுக்கு புதிய தொடக்கமாக அமையும். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்தான் இந்த முடிவு எடுக்க காரணம்'' என்று கூறினார்.
பொருளாதார தடை நீக்கம் குறித்த டிரம்ப் அறிவிப்பை சிரியாவில் அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்