Breaking News

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை மறித்த போலீசார் - பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் 3 வயது குழந்தை பலி!

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை மறித்த போலீசார் - பைக்கில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி!

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ் இழுத்து பிடித்ததால், பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவைச் சேர்ந்த அசோக்-வாணி தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையைத் தெரு நாய் கடித்ததால், குழந்தையை அழைத்துக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

மத்துார் சாலையில் சென்றபோது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை சோதனை செய்து கொண்டிருந்த போக்குவரத்து போலீசார், அந்த தம்பதியை இழுத்து பிடித்து, நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஓட்டுநர் தானாகவே வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார், 

மேலும் இந்த வீழ்ச்சிக்கு எந்த அதிகாரியும் பொறுப்பல்ல.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback