குவைத் நாட்டில் ஒரே நாளில் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட 37 ஆயிரம் பேர் - முழு விவரம்
அட்மின் மீடியா
0
குவைத்தில் 26,000 பெண்கள் உட்பட 37,000 பேரின் குடியுரிமையை குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் -அஹ்மத் அல்-சபா ரத்து செய்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான குவைத்தில், 2023ல் ஷேக் மெஷால் அல்- அஹ்மத் அல்-சபா மன்னராக பதவியேற்றார்
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 'நாட்டில் உள்ள 50 லட்சம் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். எனவே, குவைத்தை சுத்தமாக்கி, உண்மையான மக்களுக்கு திரும்ப வழங்கப்படும். குவைத் ரத்த உறவு உடையவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்' என்றார். அதன்படி நேற்று ஒரே நாளில் 37,000 பேரின் குடியுரிமை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது குவைத் ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.இதனால், ஒரே நாளில் 26,000 பெண்கள், தங்கள் குடும்பத்தையும் நாட்டையும் இழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டனர்.
முன்னதாக குவைத் தந்தைக்கு பிறந்தவர்களுக்கு அரசியல் உரிமை, ஓட்டுரிமை என பல சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால், பிற நாடுகளைச் சேர்ந்த பெண்கள், குவைத் ஆண்களை திருமணம் செய்து குடியேறிவந்தனர்
மேலும் குடியுரிமை ரத்து உத்தரவு வெளியான உடனே வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.
26,000 பெண்கள் உட்பட 37 ஆயிரம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை. ஆனால், உண்மையான எண்ணிக்கை என்பது இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றனர்.
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்