Breaking News

சென்னையில் மொபைல் போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கட ந்த முகமது நபூல், சபீர் அகமது என்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் ரயில் மோதி முகமது நபூல், சபீர் அகமது என்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு முழு விவரம் 



சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழப்பு

உயிரிழந்த முகமது நபூல், சபீர் அகமது ஆகியோர் பெரம்பலூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ரயில் மோதி இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நஃபூல், சபீர் அகமது என தெரிய வந்துள்ளது. 

பின்னர், தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback