Breaking News

இந்தியாவை சேர்ந்த 24 வயது இளம் பெண் துபாயில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு முழு விவரம் muhsina dubai

அட்மின் மீடியா
0
இந்தியாவை சேர்ந்த 24-வயது இளம் பெண் துபாயில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு முழு விவரம்




துபாயில் இந்தியா கேரளா மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த இளம் பெண்  மாரடைப்பால்  காலமானார். 

காசர்கோட்டை அடுத்த பதியடுக்கா பகுதியை சேர்ந்த இர்ஷாத் என்பவருடைய மனைவியுமான முஹ்சினா (24), மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடைந்தார். 

இர்ஷாத் துபாயின் கராமாவில்  மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வந்தார். முஹ்சினா மூன்று மாதங்களுக்கு முன்பு தான்  கேரளாவில் இருந்து  துபாய்க்கு வந்திருந்தார். 

உயிரிழந்த முஹ்சினா மற்றும் இர்ஷாத் தம்பதியினருக்கு அய்சன்(4) மற்றும் இமாத்(2) என்ற குழந்தைகள் உள்ளனர். அவரது உடல் நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback