Breaking News

அடுத்த 2 நாட்களுக்கு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, மேலும் வலிமை பெற வாய்ப்பு உள்ளது. இதனால் பருவமழை தீவிரமாவது உறுதியாகியுள்ளது. 

இதன் காரணமாக மே 29,30ல் கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுப்பு

தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback