ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் முழு விவரம்
ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் முழு விவரம்
இந்தியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு மாதமும் காஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே, இதன்படி வருகிற 1ம் திகதியும் மாற்றம் இருக்கலாம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரையும் தான் இலவசமா ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம். அதன்பிறகு ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
கிரெடிட் கார்டு அப்டேட் வெளியாயிருக்கு.ஆட்டோ டெபிட் மூலமா நீங்க பணம் செலுத்தி வருகிறீர்கள் என்றால், அதில் தோல்விகள் ஏற்படும் பட்சத்தில் 2% வரையும் அபராதம் நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும் என சொல்லி இருக்காங்க. இது ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது
இபிஓ என சொல்லக்கூடிய பிஎப் கணக்கில் ஏடிஎம் மூலம் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியும் EPFO ல் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டு, ஏடிஎம் மூலமே நேரடியாக பணத்தை எடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
ATM ல் அடிக்கடி பணம் எடுப்பவர்களுக்காக புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன, குறிப்பிட்ட கால அளவுகளில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும், அது மீறும் பட்சத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
ஜூன் 1 முதல் விமான நிலைய ஆணையம் (AAI), சிறிய விமானங்களின் புறப்பாட்டை T1-லிருந்து T4-க்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்