நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அதி நவீன சிப்களுடன் இ பாஸ்போர்ட் அறிமுகம்... முழு விபரம்

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அதி நவீன சிப்களுடன் இ பாஸ்போர்ட் அறிமுகம்... முழு விபரம்


நாடு முழுவதும் நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், ராஞ்சி மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இப்போது இ-பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

விரைவில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவா மையங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்களில் ஆண்டெனா மற்றும் ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) சிப் உள்ளன. இ

ந்த அம்சம் பாஸ்போர்ட்டை வழக்கமான பாஸ்போர்ட்டுகளிலிருந்து எளிதாக வேறுபடுத்தி அறிய உதவுகிறது. முன் அட்டையின் கீழே அச்சிடப்பட்ட தங்க நிற சின்னமும் இதில் உள்ளது.

இ-பாஸ்போர்ட்டிற்கான உறுதியான உள்கட்டமைப்பு பொது விசை உள்கட்டமைப்பு (PKI) மூலம் எளிதாக்கப்படுகிறது. இது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கிறது, மேலும் சிப்பில் சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தரவின் சரியான தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அங்கீகரிக்கிறது.

பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என அழைக்கப்படும் இ பாஸ்போர்ட்கள், ஏடிஎம் கார்டுகள் போல சிப் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சிப்பில் சம்மந்தப்பட்டவர்களின் முழு விவரங்கள் அடங்கி இருக்கும்.


இ-பாஸ்போர்ட்டின் சிறப்பு அம்சங்கள்! 

இ-பாஸ்போர்ட் (E-Passport) என்பது சாதாரண பாஸ்போர்ட்டைப் போலவே இருக்கும், ஆனால் டிரைவிங் லைசென்ஸ்,ஏடி எம் கார்டில்  உள்ளதைப் போன்ற சிப் இ- பாஸ்போர்ட்டிலும் காணப்படும். 

இந்த சிப்பில், பயணிகளின் முழுமையான தகவல்கலுடன் பயோமெட்ரிக் தரவுகளும் இருக்கும். பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற தகவல்கள் இந்த மைக்ரோசிப்பில் சேமிக்கப்படும். இந்த சிப் மூலம் இமிகிரேஷன் கவுன்டரில் பயணிகளின் சரிபார்ப்பு பணி விரைவாக நடப்பதோடு, போலி பாஸ்போர்ட் பிரச்சனை ஒழியும் என்பது சிறப்பு. 

பல நாடுகளில் இந்த பாஸ்போர்ட் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இ-பாஸ்போர்ட்டை சில நொடிகளில் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால் நீண்ட வரிசைகள் இல்லை

போலி பாஸ்போர்ட்டுகளை உருவாக்குவதை தடுக்கிறது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback