அரசு பேருந்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் 20 முறை இலவசமாக பயணம் செய்யலாம் - போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பு
அரசு பேருந்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் 20 முறை இலவசமாக பயணம் செய்யலாம் - போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று (18.11.2024) மதியம் 12 மணி முதல் 90 நாட்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இனி 90 நாட்ளுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து மேற்கண்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் 75 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசு வெல்லும் 25 நபர்கள்
1.07.2025 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பரிசு வெல்லும் 25 நபர்கள்
1.07.2025 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவசமாக பயணம் செய்யலாம்.
மூன்றாம் பரிசு வெல்லும் 25 நபர்கள்
1.07.2025 முதல் 30.06.2026 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 05 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்