ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு
தேர்தல்:-
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ., இளங்கோவன் காலமானாதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானாதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது
இந்நிலையில், இன்று (ஜன.,07) டில்லி சட்டசபை தேர்தலுடன், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை பிப்.,8 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பாஜக புறக்கணிப்பு:-
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அறிவிப்பு
தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பா ஆட்சியைப் பார்த்து பார்த்து வருகிறோம் வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை. பெண்கள், குழந்தைகள் முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தன்னப்பட்டிருக்கிறது. ட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தமக்கு வழங்கிய அரசியல் சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள். இது திராவிட மாடல் இல்லை. Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை நடைபெறவிருப்பது. இடைத் நேர்தலுக்கான இடைத் தேர்தல் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது. பொதுமக்கனைப் வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம் ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
வரும் 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல் அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இதன் நடுவே இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை. தேசிய ஜனநாயகத் கூட்டணி ணி புரக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம்.
2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் அறிவிப்பு:-
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார்.
அதிமுக போட்டியில்லை:-
இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
தேமுதிக புறக்கணிப்பு:-
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது.