தனது உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது என்ன முழு விவரம்
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது என்ன முழு விவரம்
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆளுநர் உரை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த ஆண்டு உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம்.இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார்.அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.
பேரவையில் முதலில் தேசிய கீதம் வாசிக்க ஆளுநர் ரவி முன்பே வலியுறுத்தியிருந்தார்.ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதாக தகவல் தெரியவந்துள்ளது
தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உரையை வாசிக்காத ஆளுநர் ரவி, இம்முறை அவையில் இருந்தே வெளியேறினார்.
ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு
Tags: அரசியல் செய்திகள்
