Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது. 



2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தேர்தல்:-

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ., இளங்கோவன் காலமானாதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானாதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது

இந்நிலையில், இன்று (ஜன.,07) டில்லி சட்டசபை தேர்தலுடன், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை பிப்.,8 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

திமுக வேட்பாளர் அறிவிப்பு:-

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. 

வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார்.

வி.சி.சந்திரகுமார் 

2016ம் ஆண்டு முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளாரக உள்ளார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராக இருந்தவர் 

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளாராக இருந்தவர்

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளாராக இருந்தவர்

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற பொறுப்பாளாராக இருந்தவர்

அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழு நேர தேர்தல் பணி ஆற்றியவர்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback