Breaking News

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் தே.மு.தி.க அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு - தடையை மீறி பேரணி!

அட்மின் மீடியா
0

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் தே.மு.தி.க அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு - தடையை மீறி பேரணி!

தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்று வரும் அமைதி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.

கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக அறிவித்து இருந்தார். 

அதன்படி கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தே.மு.தி.க திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக தொண்டகர்கள் குவிந்த நிலையில், இதனால் சென்னை கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தே.மு.தி.கவின் அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.இந்த நிலையில், காவல்துறையினரின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback