Breaking News

புதுச்சேரியில் 8-ம் வகுப்பு வரை ஆல்-பாஸ் ரத்து புதுச்சேரி அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் 8-ம் வகுப்பு வரை ஆல்-பாஸ் ரத்து புதுச்சேரி அரசு அறிவிப்பு

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் ஆணைப்படி, புதுச்சேரியில் 5, 8ம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

அதாவது மத்திய அரசுப் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் ஆண்டு இறுதித் தோ்வில் தோ்ச்சியடையவில்லை என்றால், மறுதோ்வு எழுதாமல் அவா்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறுதோ்வு நடத்தப்படும். மறுதோ்விலும் மாணவ-மாணவிகள் தோல்வியடையும் பட்சத்தில் அவா்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஆல் -பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி 5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி ரத்து என்ற உத்தரவு புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்படும். புதுச்சேரியில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் சிறந்த கல்வியாளராக உருவாக்கவுமே கொண்டுவந்துள்ளது. அதனால மாணவர்கள் இடைநீக்கம் என்பதற்கான வாய்ப்புகள் இங்கு இருக்காது' என்று தெரிவித்தார்

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback