முக்தி அடைந்து இறைவனிடம் செல்கின்றோம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருவண்ணாமலையில் தற்கொலை முழு விவரம்
முக்தி அடைந்து இறைவனிடம் செல்கின்றோம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருவண்ணாமலையில் தற்கொலை
திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்கள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை சூரியலிங்கம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறையின் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. பயந்துபோன ஊழியர்கள் உடனடியாக திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 2 ஆண், 2 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த யாசர்(45), அவரது மனைவி பிரியா(40), இவர்களது மகள் ஜலந்தரி(17), மகன் முகுந்த் ஆகாஷ் குமார் (15) என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அதில், நாங்கள் முக்தி அடையப்போவதாகவும் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.முக்தி அடையப்போவதாக அவர்கள் எழுதிவைத்த கடிதம் சிக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
