பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 கொடுக்காதது ஏன்? - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 கொடுக்காதது ஏன்? - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பல்வகை பொருட்கள் வழங்கப்படும். அத்துடன் ஆட்சி நிர்வாகத்திற்கு ஏற்றார் போல் ரூ.1,000 முதல் பரிசுத்தொகுப்புடன் வழங்கப்படும். இந்நிலையில் 2025 ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் மக்களுக்கு பொங்கல் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை.
2025 தைப் பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் திருவிழாவை ஒட்டி இலவச வேட்டி, சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்
கடந்தாண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம் பேரிடர்களுக்காக மாநில நிதியிலிருந்து செலவிட்டிருக்கிறோம் ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே தந்துள்ளது மத்திய அரசு
பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது: நல்ல சூழல் விரைவில் உருவாகும் உரிமைத் தொகை ரூ.1000ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
