Breaking News

கனமழை காரணமாக இன்று 19 .11.2024 பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் இதோ


மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கனமழை எச்சரிக்கை காரணமாக 19.11.2024 இன்று  

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) ஒருநாள் விடுமுறை! -மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) ஒருநாள் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) ஒருநாள் விடுமுறை! -மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு

தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமையாசிரியரே முடிவு செய்யலாம் - மாவட்ட ஆட்சியர்

குறிப்பு:- வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback