Breaking News

சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Loan schemes Under Tamil Nadu Backward Classes

அட்மின் மீடியா
0

சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் முழு விவரம்



இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

Loan schemes Under Tamil Nadu Backward Classes Economic Development Corporation Limited

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக 2024-25ஆம் நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் கடனுதவி திட்டங்கள்

 1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

4. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்

5. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.125 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.125 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 81

6. குழுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில் /வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாயிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் இரு பாலருக்கான சுய உதவிக் குழு (Mixed Self Help Group) உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

7. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ. 60,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7%

8. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். இக்கழகத்தின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

9. விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும்பிறப்பிடச் சான்றிதழ் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கியிடம் சமர்பிக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://chennai.nic.in/loan-schemes-under-tamil-nadu-backward-classes-economic-development-corporation-limited-2/

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback