Breaking News

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்டாங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை முழு விவரம் bsp armstrong murder

அட்மின் மீடியா
0

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்டாங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை


சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருகிறார்.

இன்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டருகே இருந்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை திடீரென சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிச்சாய்த்து பின் அங்கிருந்து தப்பி சென்றது. 

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.கழுத்து மற்றும் தலை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரின் உயிர் பிரிந்து இருக்கிறது. குற்றவாளிகள் கைதான பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback