மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல் - பிளான் முழு விவரம் bsnl recharge plans
மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல் - பிளான் முழு விவரம்
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்திய நிலையில், பி.எஸ்.என்.எல்., மட்டும் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
249 ரூபாய்க்கான சூப்பரான திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் 45 நாட்கள் வரை இருக்கும். ஒரு நாளைக்கு 2 ஜிபி நெட், ஒரு நாளைக்கு 100 இலவச மெசேஜ், இலவச கால்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய செய்தி
