ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்த கும்பல்.. தப்பி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்த கும்பல்.. தப்பி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருகிறார்.
இன்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டருகே இருந்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை திடீரென சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிச்சாய்த்து பின் அங்கிருந்து தப்பி சென்றது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ்,அருள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்டராங்கை வெட்டிக் கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/kani_twitz24/status/1809365482144952480
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்