Breaking News

வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக காவல்துறை முழு விபரம்

அட்மின் மீடியா
0

வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக காவல்துறை முழு விபரம்



இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை

சமீப காலங்களில், இந்தியாவில் இருந்து 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள், கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கு இலாபகரமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவோ வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். 

இந்த இளைஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் அல்லது அதுபோன்ற பதவிகள் போன்ற முறையான வேலை வாய்ப்புகளை சாக்காக வைத்து பணியமர்த்தப்படுகிறார்கள். இருப்பினும், அங்கு சென்றவுடன் அவர்கள் இணைய அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டு, போலியான சமூக ஊடக சுயவிவரங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுதல். FedEx மோசடிகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களை ஏமாற்றுவதற்கான மோசடித் திட்டங்களில் ஈடுபடுதல் போன்ற சட்டவிரோத இணைய நடவடிக்கைகளில் பங்கேற்க வைக்கப்படுகிறார்கள்.

சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்களின் செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை Tamil Nadu Palice உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் இந்த இணைய அடிமைத்தனம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள சேலம் மாவட்டம், தம்மம்பட்டி PS கு.எண். 139/2024 u/s 420, 368,371, 120 (b) IPC. (இதில் இரண்டு சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் கைது செய்யப்பட்டனர்). 

சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப் பிரிவு - II, கு.எண். 77/2024 u/s 419, 420, 468, 471 & 120(b) IPC மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1885 இன் பிரிவு 4 & 20. (இதில் ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்). ஆகிய வழக்குகள் இந்த முறைகேடுகள் குறித்த முழுமையான விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

(i) புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலரை (Protector of Emigrants) அணுகுவதன் மூலம் வேலையின் தன்மை மற்றும் முகவரின் சுயவிவரத்தை முழுமையாக சரிபார்க்கவும்.

(ii) வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்ப, பதிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

(iii) ஒருவர் வேலைவாய்ப்பு அல்லது பணி விசாவில் மட்டுமே பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டும். சுற்றுலா விசாவை சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

(iv) தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில்

ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அயலக தமிழர்கள் அடையாள அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/05/nrt-id-card.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback