மொட்டை மாடியில் கீழே இருந்த சோப் மீது தெரியாமல் கால் பட்டு வழுக்கி கீழே விழுந்த இளம்பெண் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ Shocking Video
மொட்டை மாடியில் கீழே இருந்த சோப் மீது தெரியாமல் கால் பட்டு வழுக்கி கீழே விழுந்த இளம்பெண் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ Shocking Video
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டி.ஜே.ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் பகுதியான கனகநகர் பகுதியில் பெண் ஒருவர் மொட்டைமாடியில் கீழே இருந்த சோப் மீது தெரியாமல் கால் பட்டு வழுக்கி கீழே விழுந்ததில் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
கீழே விழுவதற்கு முன்பு மனைவியை மேலே இருந்த அவருடைய கணவர் தாங்கி பிடித்து கொண்டு இருந்தார்.ஆனாலும், கொஞ்ச நேரம் மட்டுமே அவரால் பிடித்து இருக்க முடிந்தது. பின் அவருடைய மனைவி கீழே விழுந்தார்.
கிழே நிறைய இருசக்கர வாகனங்கள் இருந்த நிலையில், அதில் விழுந்து அந்த பெண்ணின் தலையில் பயங்கரமாக காயமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு இருந்த ஒருவர் பெண்ணை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது கீழே விழுந்த அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அந்த பெண் தற்போது கோமா நிலையில் உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
https://x.com/madhuriadnal/status/1804442065645805952
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
