இந்திய விமானப்படையில் அக்னிவீா் வாயு வீரா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Indian Air Force Agniveer Vayu Recruitment 2024
Indian Air Force Agniveer Vayu Recruitment 2024 இந்திய விமானப்படையில் அக்னிவீா் வாயு வீரா்கள் தோ்வுக்கு ஜூலை 8 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னிவீா் வாயு ஆள் சோ்ப்புத் தோ்வுக்கு ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் 8 ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி:-
Indian Air Force Agniveer
இந்தத் தோ்வுக்கு 12-ஆம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்புகள் ஆகிய கல்வித் தகுதி உடைய திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:-
10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும்.
வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
+2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொழிற்கல்வி படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:-
விண்ணப்பதாரா்கள் 3.7.2004 அன்று அல்லது அதற்குப் பிறகு, 3.1.2008 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவா்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
28.07.2024 23:00 மணி வரை
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2025.pdf
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.
அக்னிபாத் திட்டத்தில் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம்.
4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்
இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.
இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.
அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.
வருமான வரி கிடையாது.
தனிப்பட்ட இன்சூரன்ஸ்,
மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.
இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ்,இந்திய ராணுவத்தில் சேர நேற்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அக்னிவீரர் தேர்வின் முதல் படியான பொதுத்தேர்வு ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதிக்குள் நாடு முழுவதும் சுமார் 180 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேவையான ஆவணங்கள்:-
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்,
பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ்
agneepath army apply date
agneepath scheme eligibility
agneepath scheme
agneepath scheme details
agneepath scheme apply online
agneepath scheme details qualification
agneepath scheme qualifications
Agneepath Scheme 2023 Details Pdf
Tags: வேலைவாய்ப்பு

