Breaking News

சாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

சாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுறிக்கையில், விபத்து வழக்குகளின் போது ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.சாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விபத்து வழக்குகளின்போது ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறியிருந்த நிலையில், சாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback