Breaking News

மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டில் சீரியல் லைட் செட் செய்யும் போது பறிபோன உயிர்

அட்மின் மீடியா
0

மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டில் சீரியல் லைட் செட் செய்யும் போது பறிபோன உயிர்

மனைவியின் பிறந்தநாளை கொண்டாட நினைத்த கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் மரணமடைந்துள்ளார்.

திருமணமாகி 8 மாதங்களேயான நிலையில், மனைவி கீர்த்தியின் (25) பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று மாலை சீரியல் பல்ப்கள் அமைத்து வீட்டில் அலங்காரம் செய்துள்ளார் கணவர் அகஸ்டின் பால் (29). அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் அகஸ்டின் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback