Breaking News

தமிழக அரசில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கரூர் மாவட்டத்தில் உள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவைமையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

 


பணி:-

காவலர்/ஓட்டுநர்

கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) 181 தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 24X7 பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சுசெய்து 28.06.2024 பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறும் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. 

இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதளத்தில் https://karur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பதவி -காவலர்/ஓட்டுநர் (Security/driver)

1. கரூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
2. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
4. மாதம் தொகுப்பூதியம் ரூ.12,000/-
5. பணி முன் அனுபவம் இருத்தல் வேண்டும்
6. காலிப்பணியிடம் 1

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2024/06/2024061198.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback