Breaking News

பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி நகை கடை கொள்ளை முயற்சியை தடுத்த உதவி ஆய்வாளர் வீடியோ

அட்மின் மீடியா
0

பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி நகை கடை கொள்ளை முயற்சியை தடுத்த உதவி ஆய்வாளர் வீடியோ



மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்சில் நகைக்கடையில் முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி காட்டி மிரட்டி பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டு கடையில் கொள்ளையடித்தனர். சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கும்போது

மேகநாத் மொண்டல் என்ற காவல் துறை உதவியாளர் தனது உறவினரைப் பார்க்க அந்த வழியாக சென்று கொண்டிருந்த போது நகைகடையில் கொள்ளையடித்து கும்பல் தப்புவதை பார்த்த அவர் அங்கு இருந்த மின் கம்பத்துக்கு பின்னால் நின்று கொண்டு தான் வைத்திருந்த துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கி சுட்டார். 

உதவி ஆய்வாளர் சுட்டதில் கொள்ளையன் ஒருவர் காயமடைந்து சுருண்டு விழுந்தான் கொள்ளையர்கள் 2 கோடி மதிப்புள்ள நகையை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பியோடினர்.கொள்ளையர்களை துரத்திச் சென்ற மேகநாத் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.”அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார், மீதமுள்ள மர்ம நபர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

துப்பாக்கி சண்டை சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/WBPolice/status/1800378527252128203

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback