இந்தியா முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் முழு விவரம்
இந்தியா முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் முழு விவரம்
ஜூலை 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உட்பட சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த சட்டங்கள் கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசின் அரசிதழில் வெளியாகியது
3 புதிய குற்றவியல் சட்டங்களும் நாளை ஜூலை 1 ம் தேதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த புதிய சட்டங்கள் குறித்த பல மாநிலங்களில் கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் புதிய சட்டங்களை நாளை முதல் பாஜக அரசு அமல்படுத்த உள்ளது.
1860-ல் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (IPC), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023
1872-ல் உருவாக்கப்பட்ட இந்திய சாட்சிகள் சட்டம் (IEA), பாரதிய சாக்ஷிய அதினியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023
1898-ம் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) பாரதிய நியாய சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NYAYA SANHITA 2023
BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023
BHARATIYA NYAYA SANHITA 2023
BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
