Breaking News

10 மணி நேர போராட்டத்திற்கு பின் திருப்பத்தூரில் சிறுத்தை பிடிபட்டது முழு விவரம்

அட்மின் மீடியா
0

 10 மணி நேர போராட்டத்திற்கு பின் திருப்பத்தூரில் சிறுத்தை பிடிபட்டது

ருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உடனடியாக பள்ளியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்

திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தச் சிறுத்தையின் தாக்குதலில் முதியவர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயனைப்பு படையினர், மற்றும்  வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

வனத்துறையினரும் காவல்தூறையினரும் இணைந்து வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் சிறுத்தையை பார்க்கும் ஆவலுடன் அங்கே திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திருப்பத்தூர் தனியார் பள்ளிக்குள் நுழைந்து முதியவரை தாக்கி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது. கால்நடை மருத்துவர் சுகுமார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்தார். அதன் பின் அதற்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பத்திரமாக காப்புக் காட்டில் விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/SRajaJourno/status/1801580558201532590

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback