Breaking News

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்படும் என கொடைக்கானல் ஹோட்டல் சங்கத்தினர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்படும் என கொடைக்கானல் ஹோட்டல் சங்கத்தினர் அறிவிப்பு

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.

இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீசனில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் ஆண்டு முழுவதும் வாழ்க்கை நடத்துவதாக கொடைக்கானல் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 இ-பாஸ் முறையால் கொரோனா காலத்தை போல தங்கள் வாழ்வாதாரம் முடங்கி விடும் என கொடைக்கானல் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback